கப்ரால் வெளிநாடு செல்ல தடை நீக்கம்

Date:

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (19) உத்தரவிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வேறொரு தரப்பினருக்கு வழங்கியமை தொடர்பாக தினியாவின் கட்டுப்பாட்டு உரிமையாளர்கள் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் இந்த வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.

நேற்று, அஜித் நிவார்ட் கப்ரால், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதால், இந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியதையடுத்து, அந்தக் கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே, 100 சரீரப் பிணையில் மார்ச் 02 அன்று வரை வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி உத்தரவு வழங்கினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...