இரு பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்த தந்தை – அம்பாறையில் சம்பவம்

Date:

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலைசெய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது 29 வயதான மகன் மற்றும் 15 வயதான மகள் ஆகியோரையே தந்தை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது பிள்ளைகளின் கழுத்தை வெட்டி இருவரையும் தந்தை கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து, 60 வயதான தந்தை, தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த நிலையில், கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என தெரிய வருகின்றது. பிள்ளைகளின் தாய் அண்மையில் உயிரிழந்த நிலையிலேயே, இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...

ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் நியாயம்

-மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி...

மீண்டும் சந்தர்ப்பம் கோரும் மகிந்த ராஜபக்ச!

நாட்டின் மக்கள் தற்போது மிகவும் கடினமான வாழ்க்கை நிலையை எதிர்கொண்டு வருவதாகவும்,...

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...