நாகை மீனவர்கள் மீது திடீர் தாக்குதல்

Date:

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவரை சக மீனவர்கள் மீட்டு நாகை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீனவர்களை கட்டையால் தாக்கி அவர்களிடம் இருந்து இந்திய ரூ.5 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மீனவர்கள் படகுகளை வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...