கொட்டக்கலையில் ரணில்! தலவாக்கலையில் சஜித்!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டக்கலை மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ளார்.

இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ளார்.

கொட்டக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தின கூட்டத்தில் அதிகளவான மலையக மக்கள் பங்கேற்க உள்ளதாகவும் அங்கு மே தின கூட்டம் மற்றும் பேரணி இடம்பெறும் எனவும் செந்தில் தொண்டமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொட்டக்கலை நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி கொழும்பில் நடைபெற உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொழிலாளர் தேசிய சங்கம் தலவாக்கலையில் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்தில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்க உள்ளார்.

அந்த கூட்டத்தின் பின் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள மே தின நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...