தோட்ட தொழிலாளர் சார்பில் சட்ட உதவி வழங்க ஜனாதிபதி முடிவு

Date:

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட முதலாளிகள் வழக்குத் தாக்கல் செய்தால், தொழிலாளர்களின் தரப்பில் இருந்து வழக்கு விசாரணைக்கு ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாளிகள் சம்பள உயர்வு விடயத்தில் தொடுக்கும் வழக்கு தொடர்பில் தொழிலாளர்கள் தரப்பில் இருந்து உண்மைகளை முன்வைப்பதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் சட்ட உதவிகளையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் இணை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.

கொட்டகலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததுடன், சம்பள அதிகரிப்பு தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலையும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் வெளியிட்டார்.

தோட்ட நிறுவனங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி உரிய சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

இலங்கை தோட்ட முதலாளிமார் சட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி உரிய கருத்து வெளியிடும் போது, அவரது தொழிற்சங்கம் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை. எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தோட்ட முதலாளிகளின் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...