விஜயதாசவின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்சவை நியமித்தமைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கவும், எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தடுக்கவும் கடுவெல மாவட்ட நீதிபதி துலானி விக்ரமசூரிய இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ, பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் பொலிட்பீரோ உறுப்பினர்கள் ஆகியோருக்கு தடையின்றி இந்த வழக்கைத் தவிர வேறு எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் மொஹமட் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...