இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு

Date:

தமிழீழ விடுதலைப் புலிகளை சட்டவிரோத அமைப்பாகவும் தடை செய்யப்பட்ட அமைப்பாகவும் இந்தியா மீளவும் பிரகடனம் செய்துள்ளது.

இந்திய மத்திய உள்துறை அமைச்சு 5 வருடங்களுக்கு தடை உத்தரவினை நீடித்து அறிக்கை மூலம் இதனை அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையைத் தளமாகக் கொண்டுள்ள போதிலும் அதன் ஆதரவாளர்களும் அபிமானிகளும் முகவர்களும் இந்தியாவிலும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவின் இறைமைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடை செய்யும் சட்டத்தின் மூன்றாம் பிரிவின் முதலாம், மூன்றாம் உப பிரிவுகளினால் வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய, விடுதலைப் புலிகளை சட்டவிரோத அமைப்பாக இந்திய மத்திய அரசாங்கம் 2019 மே 14 ஆம் திகதி பிரகடனம் செய்திருந்தது.

அதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான அறிவித்தலை இந்திய மத்திய உள்துறை அமைச்சு இன்று வௌியிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...