கொழும்பு – பதுளை ரயில் சேவை பாதிப்பு

Date:

தியத்தலாவ ஹப்புத்தளைக்கும் தியத்தலாவ பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரதப் பாதையில் இன்று (23) காலை பாரிய டர்பெண்டைன் மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று (23) காலை பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மனிகே புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு அஞ்சல் புகையிரதம் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையுடன் புகையிரத பாதையில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் தியத்தலாவ இராணுவ முகாம் அதிகாரிகள் புகையிரத பாதையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...