தம்மிக்கவுக்குக எதிராக மொட்டு எம்.பி. போர்க்கொடி!

Date:

ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மொட்டுக் கட்சியில் களமிறங்க தம்மிக்க பெரேராவுக்கு உள்ள தகைமைகள் எவை? அவரைக் களமிறக்கும் முடிவை கட்சி இன்னும் எடுக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின் நிறைவேற்றுக் குழுவே தீர்மானிக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை வளைத்துப் போடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்தவொரு நிபந்தனையையும் மொட்டுக் கட்சி விதிக்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்பது மட்டுமே எமது நிபந்தனை.

பொது வேட்பாளராக – பொதுக் கூட்டணியிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார். ஜனாதிபதித் தேர்தலுக்கு அவர் யானை சின்னத்தில் வரமாட்டார். ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் முடிவையே மொட்டுக் கட்சி எடுக்கும் என நம்புகின்றேன்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...

அரசியல் + பாதாள உலகம்! சிக்கும் முக்கிய புள்ளிகள்

போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி...

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...