9 தமிழக மீனவர்கள் கைது

Date:

தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் மீனவர்கள், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படை மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வந்த செயல்கள் முந்தைய நாட்களை போல இல்லை.

எனினும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடருகின்றது.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், இன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அச்சமயம் அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து அழைத்து வரவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...