சமஷ்டியை வலியுறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு – சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு 

Date:

“ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஷ்டியை வலியுறுத்தி வடக்கு – கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்டிருந்தால் அந்த வேட்பாளருக்கு  ஆதரவு வழங்குவது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிசீலனை செய்யும்.”- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று (28) நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஓகஸ்ட் மாதம் 10 ,11 ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூடி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஷ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையையே நடத்த முடியாதவர் என்று சுமந்திரன் குறிப்பிட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,”எமது கட்சியைச் சேர்ந்தவரின் கருத்துக்கு வியாக்கியானம் வழங்குது சரியான விடயம் அல்ல.எனினும், இன்றைய காலச் சூழல் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்ல வேண்டும்.

அதனை விட்டு ஒற்றுமையைக் குழப்பிப் பேசிக்கொண்டிருந்தால் அடிப்படை  அரசியலைக் கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கில் பிள்ளையானை நம்பி பொலிஸ் அதிகாரம் கொடுக்கலாமா என்று அன்று கேட்டிருந்தார்.அதற்காகவே பொலிஸ் அதிகாரம், நிதி அதிகாரம் வழங்குமாறு கோரி வடக்கில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனைக் களமிறக்கினோம். எல்லோருடைய விருப்பத்திலேயே அந்தத் தெரிவு  இடம்பெற்றது.” – என்றார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...