ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான செயற்குழு கூடி, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சையாகப் போட்டியிட வேண்டும் என்றும், முழு உறுப்பினர்களும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளனர்.

அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் முழு ஐக்கிய தேசியக் கட்சியும் முழுமையாகச் செயற்படுகிறது” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து...

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு நேற்று (07) துபாயில்...

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...