23 வேட்பாளர்கள் மாயம்: தேர்தல்கள் ஆணைக்குழு

Date:

இலங்கைத்தீவு இம்மாதம் 21ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றில் முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையாகியுள்ள வேட்பாளர்களுள் 23 பேரின் தற்போதைய நிலை தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை என கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொது மக்களுக்கான கூட்டங்களை நடத்தி தேர்தல் வியாபாரங்களை நடத்தி செல்வது சுமார் 15 வேட்பாளர்கள் மாத்திரமே எனவும் அறியக் கிடைத்துள்ளது.

அதேபோல், குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள தொலைபேசி இலக்கங்கள் கூட போலியானவை என தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பிரதான நான்கு கட்சிகளும் தமது தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...