வடக்கு, கிழக்கு மக்கள் ரணிலை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு – பரப்புரைக் கூட்டத்தில் அமைச்சர் நிமல் கூறினார்

Date:

“வடக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தத் தீர்மானித்து விட்டனர்.”

– இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஹப்புத்தளையில் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால்  முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

”சஜித் பிரேமதாஸவால் அல்லது அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் இருவரும் பிரதமர்களாகக் கூட பதவி வகித்தவர்கள் இல்லை. இருவரும் முட்டாள்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்தான் நாட்டுக்கு நன்மை கிடைக்கும். வரிசை யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரே தலைவர் அவர்தான்.

இன்று வடக்கு மாகாண மக்களும், கிழக்கு மாகாண மக்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தத் தீர்மானித்து விட்டனர். ஊவா மாகாண மக்களும் ஒருபோதும் நன்றிக்கடன் மறப்பவர்கள் அல்லர்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட ஜனாதிபதி பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது தோட்ட மக்களின் தேவைகள் பலவற்றையும் தீர்த்து வைப்பார்.

இன்று பதுளை வைத்தியசாலை வசதிகளை மேம்படுத்தித் தரவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார். எனவே, அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...