இறுதி முடிவு இன்னும் சற்று நேரத்தில்!

Date:

ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த முதல் சுற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார்.

இதேவேளை இன்னும் சில மணி நேரங்களில் ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையகம் முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையிலே தொடர்ந்தும் அமைதியாக செயற்பட்டு தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

1. அநுரகுமார திஸாநாயக்க – 5,634,915 (42.31%)

2.சஜித் பிரேமதாச 43,63,035 (32.76%)

3.ரணில் விக்கிரமசிங்க – 2,299,767 (17.27%)

4. நாமல் ராஜபக்ச – 342,781 (2.57%)

5. அரியநேத்திரன் – 226,343 (1.70%)

6. திலித் ஜயவீர – 122,396 (0.92%)

7. கே.கே. பியதாச 47,543 (0.36%)

எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறாததால் 2 ஆம் சுற்று வாக்கு எண்ணும் பணி இடம்பெற்றுவருகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...