Saturday, September 28, 2024

Latest Posts

பொதுத் தேர்தலுக்கு பொதுக் கூட்டணி

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் அணிகள் கூட்டாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த முன்னாள் எம்.பி.க்கள் தலைமையில் கொழும்பில் உள்ள விக்கிரமசிங்கவின் இல்லத்தில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் பொதுக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இது குறித்த தகவல் வரும் 27ம் திகதி வெளியிடப்பட உள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.