Friday, October 4, 2024

Latest Posts

பொதுத் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் சிலிண்டர் சின்னம்!

ஜனாதிபதித் தேர்தலின்போது, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த தரப்பினர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள கூட்டணி மற்றும் சின்னம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி வந்தனர்.

கொழும்பு, பளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்திலேயே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது, பொதுச் சின்னமாக எரிவாயு சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியை, புதிய ஜனநாயக முன்னணி கோரியிருந்தது.

இதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே, புதிய ஜனநாயக முன்னணியாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க, இந்தத் தரப்பினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தரப்பினர் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த தரப்பினர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணியின் கீழே களமிறங்கவுள்ளனர்.

இதுதொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேடக் கூட்டம் ஒன்றும் இன்று பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.