ஆனையிறவு சோதனைச் சாவடி அகற்றப்பட்டது!

Date:

கிளிநொச்சி – ஆனையிறவில் கடந்த 17 வருடங்களாக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி நேற்று செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கான ஒரேயொரு தரைவழியான ஆனையிறவு வரலாற்றுக் காலம் தொட்டு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1952ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு சோதனைச் சாவடியும் இயங்கி வந்தது.

வரலாற்றுக் காலம் தொட்டு போர் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவை 2000ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த இராணுவ முகாமும் சோதனைச் சாவடியும் அகற்றப்பட்டன.

இறுதிப் போர் நடவடிக்கையின்போது ஆனையிறவை 2008ஆம் ஆண்டு இராணுவம் மீளக் கைப்பற்றியது. இதன் பின்னர் கடந்த 17 வருடங்களாக இயங்கி வந்த சோதனைச் சாவடியே தற்போது அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி இலங்கையில் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பர...