மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

Date:

மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால் பாலத்தின் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பாலம் மேலும் சேதமடையாத வகையில்  பாலத்தின் இரு புறங்களிலும் தற்போது மண் மூடைகள் அணைக்கப்பட்டுள்ளன.

விரைவில் பாலம் புனரமைக்கப்பட்ட பின்னர் கனரக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று யாழ். மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...