செவ்வாயன்று புதிய சபாநாயகர் தெரிவு – மூன்று பேரின் பெயர்கள் முன்மொழிவு!

Date:

சபாநாயகர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அசோக ரன்வெல நேற்றுமுன்தினம் அறிவித்த நிலையில் புதிய சபாநாயகர் தெரிவு நடைபெறவுள்ளது.

புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாகத் தெரிவு செய்யப்படவுள்ள சபாநாயகர் தொடர்பில் சர்ச்சை எழுந்தால் அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்று அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதிச் சபாநாயகர் றிஸ்வி சாலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பதி, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும், இன்று அல்லது நாளை இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...