ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை அங்கீகாரம்

Date:

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…

15. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை திருத்தம் செய்தல்

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் அமுல்படுத்திய பின்னர் குறித்த சட்டத்துக்கு அமைய புலனாய்வு, வழக்கு தாக்கல் செய்தல், நிர்வாக ரீதியான மற்றும் நீதிமன்ற ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுக்கு கணிசமான சட்ட ரீதியான பொருள்கோடல்கள் மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே மேற்குறித்த சட்டத்தின் சில பிரிவுகளை திருத்தம் செய்தல் மற்றும் புதிதாக சில பிரிவுகளை மேற்குறித்த சட்டத்தில் அறிமுகம் செய்வதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது. அதற்கமைய 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஏற்பாடுகளை ஆய்வுசெய்து கட்டாயமாக திருத்தம் செய்ய வேண்டிய பிரிவுகள் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய பிரிவுகள் தொடர்பான விதந்துரைகள் அடங்கிய விபரமான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஒரு ஆணையாளரின் தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமிப்பதற்கு கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...