சஜித் கட்சிக்கு திஸ்ஸ அத்தநாயக்க விடுக்கும் எச்சரிக்கை

Date:

சமகி ஜனபலவேகய கட்சி தொடர்பில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்கள் எதுவும் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் எவருக்கும் தெரியாது எனவும், அவை பதவிகளை வகிக்காதவர்களால் எடுக்கப்படுவதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலை தொடருமானால் கட்சியின் ஒரு குழு கட்சியை விட்டு வெளியேறும் அபாயம் இருப்பதாக இணைய சேனலுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பில் கட்சியின் தலைவர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை எனவும், இறுதிப் பொறுப்பை கட்சித் தலைவரும் செயலாளர் நாயகமும் சுமத்துவது ஏன் தமக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சமகி கூட்டணியில் ஒன்றிணைந்த கட்சிகளுடன் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு உடன்படிக்கையோ, உடன்படிக்கை ஆவணத்தையோ, கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் தானோ அல்லது உயர் அதிகாரிகளோ காணவில்லை எனவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...