சஜித் கட்சிக்கு திஸ்ஸ அத்தநாயக்க விடுக்கும் எச்சரிக்கை

Date:

சமகி ஜனபலவேகய கட்சி தொடர்பில் எடுக்கப்படும் முக்கிய தீர்மானங்கள் எதுவும் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் எவருக்கும் தெரியாது எனவும், அவை பதவிகளை வகிக்காதவர்களால் எடுக்கப்படுவதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலை தொடருமானால் கட்சியின் ஒரு குழு கட்சியை விட்டு வெளியேறும் அபாயம் இருப்பதாக இணைய சேனலுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பில் கட்சியின் தலைவர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை எனவும், இறுதிப் பொறுப்பை கட்சித் தலைவரும் செயலாளர் நாயகமும் சுமத்துவது ஏன் தமக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சமகி கூட்டணியில் ஒன்றிணைந்த கட்சிகளுடன் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு உடன்படிக்கையோ, உடன்படிக்கை ஆவணத்தையோ, கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் தானோ அல்லது உயர் அதிகாரிகளோ காணவில்லை எனவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...