ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சருடன் சஜித் சந்திப்பு

Date:

ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் உள்ளிட்ட ஐக்கிய இராச்சியத்தின் தூதுக்குழுவினரை எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட குழு சந்தித்து கலந்துரையாடியது.

இந்த சந்திப்பின் போது, நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உதவியை வழங்குமாறும், சுற்றுலாத் துறை தொடர்பாக ஐக்கிய இராச்சிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தூதுக்குழுவினரிடம் சஜித் கோரிக்கை விடுத்தார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய அமைச்சர் கேத்தரின் வெஸ்டின் பிரத்தியேகச் செயலாளர் ரொப் கோர், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பேட்ரிக் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் அலெக்சாண்டர் ஸ்மித் ஆகியோருடன், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹுமான் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் ஏரான் விக்ரமரத்னவும் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...