மேர்வின் சில்வா விளக்கமறியல்!

0
22

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹர நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேர்வின் சில்வா பத்தரமுல்லையில் உள்ள அவரின் இல்லத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.

போலி ஆவணங்களை தயாரித்து களனி பிரதேசத்தில் அரச காணியொன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கிரிபத்கொடை புதிய நகரத்தை நிர்மாணிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here