மேலும் ஒரு நிறுவனத் தலைவர் பதவி விலகல்

Date:

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தனது ராஜினாமா கடிதத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குக் கீழ் இருந்த மூன்று நிறுவனத் தலைவர்கள் முன்னர் பதவி விலகினர்.

இவர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன, போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ருவன் விஜயமுனி மற்றும் இலங்கை போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் டாக்டர் பந்துல திலீப விதாரண ஆகிய அதிகாரிகள் ஆவர்.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையர் நாயகத்தின் ராஜினாமாவுடன், போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள ஆறு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஷாந்த அனுருத்த வீரசிங்கவின் ராஜினாமாவைத் தொடர்ந்து காலியாக இருக்கும் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் பதவிக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...