வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதியை விடுவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் குற்றப்புலனாய்வுத் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர்கள் அனுப்பப்பட்டது. எனினும் விடுவிக்கப்பட்டவரின் நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை. இவ்வறான நிலையில் ஜனாதிபதியின் அனுமதியின்றி சட்டவிரோதமாக விடுவிக்கட்டுள்ளார்.