குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் குறித்து தகவல்

0
40

இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்ற கும்பல்கள் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

52 குற்ற கும்பல்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும் இந்த கும்பல்கள் ஒவ்வொன்றும் ஒன்றாக செயல்பட்டு பின்னர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பிரிந்து செயற்படுவதாக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். 

சில கும்பல்கள் அவர்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 100 பொலிஸ் அதிகாரிகளை கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு தவறான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்களை பெற்ற பின்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here