டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

Date:

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18% பெறுமதி சேர் வரியை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. Cloud Commuting  களஞ்சிய  வசதிகள்,  கணினி  சேவைகள்,  மென்பொருள்   சேவை வழங்கல், Web-based aசேவை வழங்கல், Web-based applications, E-Commerce Services, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போலவே விளம்பரப்படுத்தல், Social Media Marketing, Data encryption போன்ற சகல இலத்திரனியல் சேவைத்துறைகள் மீதும் இது  விதிக்கப்பட்டிருக்கிறது  என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்தத் துறையில் இலட்சக்கணக்கானோர் தொழில்வாய்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இளம் தலைமுறையினர், நடுத்தர வருமானம் ஈட்டும் தலைமுறையினர் மீதான அடியாக இதை கருத முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரமே இந்தப் பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதனை மூடி மறைத்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மாற்றுவோம் என அரசாங்கம் முன்னர் பிரஸ்தாபித்தது.

என்றாலும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் எந்தவித மாற்றங்களையும் இதில் மேற்கொள்ளாமல், இந்த வரிகளைத் தொடர்ந்தும் விதித்து வருகிறது.

டிஜிட்டல் சேவைத்துறைகளை நம்பி வாழ்க்கை நடத்திவரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தொழில்முனைவோர் மீது இந்த வரிகளை விதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...