உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அழைத்து இதொகா தலைமை ஆலோசனை

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியாலயமான சௌமியபவனில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரின் முன்னிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசால் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் குறித்து புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி மன்றத்தால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ்,பிரதி தவிசாளர் ராஜதுரை, சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் மேற்பார்வை செய்வதோடு, மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்குமாறு இவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் உள்ள பலாங்கொடை பஹலவின் எல்லேபொல பகுதியில் இன்று...

குருக்கள்மடம் முஸ்லிம்களுக்கு நீதி

குருக்கள்மடம் கிராமத்தில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதியைப் பெற்றுக்...

பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

பாதாள உலகக் கும்பல் தலைவன் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின்...

மனோ எம்பிக்கு முக்கிய அமைச்சர் வழங்கிய உறுதி

“மலையக அதிகார சபை” என அறியப்படும் “பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள்...