ஜனாதிபதி நாடு திரும்பினார்

Date:

மாலைதீவுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாடு திரும்பினார்.

மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயம் அமைந்திருந்தது.

இந்த விஜயத்தின் போது, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் அந்நாட்டின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அரச பிரதானிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

இருதரப்பு, பிராந்திய, சர்வதேச விடயங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கை – மாலைதீவு இடையேயான பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடா்பான ஒப்பந்தம், மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியன கைச்சாத்திடப்பட்டன.

மாலைதீவு மற்றும் இலங்கை இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் ஜனாதிபதி அனுர குமாரவினால் மரக்கன்று நடப்பட்டது.

இலங்கை – மா​லைதீவு வர்த்தக பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக சம்மேளனம் மற்றும் மாலைதீவுகளில் வசிக்கும் இலங்கை மக்களிடையேயும் ஜனாதிபதி உரையாற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...