கொழும்பு கோட்டையில் தீ விபத்து

Date:

கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை வங்கி தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தின் போது ஐந்தாவது மாடியில் ஊழியர்கள் சிலர் பணியாற்றிக் கொண்டிருந்த போதும் எதுவித காயங்களும் இன்றி அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட தீயணைப்புப் படையினர் களத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...