UNP – SJB ஐக்கியம்!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம் வகிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்சித் தடையினை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெற உள்ளது. 

செப்டம்பர் 6 ஆம் திகதி கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவும் இந்த நிகழ்வில் சிறப்பு உரையொன்றை நிகழ்த்த உள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்சித் தடையை நீக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. 

இதனிடையே, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளினது செயலாளர்களின் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...