ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்துக்கு புதிய பஸ்நாயக்க நிலமே

Date:

வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர மகா விஷ்ணு தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க அபேரத்னவை பௌத்த விவகார ஆணையர் நியமித்துள்ளார்.

தற்போதைய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவின் பதவிக்காலம் நேற்றுடன் (21) முடிவடைந்தது.

ருஹுணு மகா கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமேயாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12வது பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (22) பதவி விலகவுள்ளார். மேலும் அவர் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளார்.

சட்டத்தின் விதிகளின்படி 3 மாதங்களுக்குள் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பௌத்த விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

பதில் பஸ்நாயக்க நிலமேயாக நியமிக்கப்பட்ட திலின மதுசங்க அபேரத்ன, தற்போதைய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கும் போது மூச்சு அடைப்பதாக கூறியும் பிணை இல்லை!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, கொழும்பு...

மின்சார சபை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின்...

ஜேவிபிக்கு எதிராக முன்னாள் எம்பிக்கள் வழக்கு தாக்கல் செய்ய முடிவு

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சிக்கு...

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேகத்தில் மோல்டா நாட்டு பிரஜை கைது

வெலிகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் ஒன்று...