சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை இலங்கை சந்தைக்கு கொண்டு செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் உயிரினங்கள், சுங்கத்துறை சோதனைகளில் சிக்காமல் இருக்க ‘ட்ரான்சிட்’ முறையில் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன.
அங்கு, பாம்பு, ஆமை போன்ற உயிரினங்களுக்கு சென்னையில் கிடைக்கும் லாபத்தை விட மூன்று மடங்கு அதிகமாக கிடைப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
