இதுவரை 465 பேர் பலி

Date:

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று (02) இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், மேலும் 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனார்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், 118 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் 83 இறப்புகளும், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், குருநாகலில் 53 இறப்புகளும், புத்தளம் மாவட்டத்தில் 27 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

கண்டி மாவட்டத்தில் 171 பேர், நுவரெலியாவில் 73 பேர், கேகாலை மாவட்டத்தில் 48 பேர், பதுளையில் 28 பேர் மற்றும் குருநாகலில் 27 பேர் பேரிடர் காரணமாக ஏற்கனவே காணாமல் போயுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதகமான வானிலையால் 437,507 குடும்பங்களைச் சேர்ந்த 1,558,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...