தெஹிவளை பாலம் அருகிலுள்ள கடற்கரை கடுமையான அசுத்த நிலை

0
29

கீழே காணப்படும் புகைப்படங்களில் தெஹிவளை பாலம் அருகிலுள்ள கடற்கரையில் நிலவும் கடுமையான அசுத்தமும் சுற்றுச்சூழல் மாசுபாடும் தெளிவாகக் காணப்படுகிறது.

பல வாரங்களாக அந்த பகுதியில் நீர் ஓட்டம் தடைபட்டு, தேங்கிய நீர், பாலிதீன் மற்றும் பல்வேறு கழிவுகள் சேர்ந்து, கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார ஆபத்து நிலவுகிறது.

அப்பகுதி மக்கள் தெஹிவளை – மவுண்ட் லவினியா மாநகர சபைக்கு வரிகளை முறையாக செலுத்தி வருகிறார்களெனினும், இந்த பிரச்சினை தொடர்பாக மாநகர சபை இதுவரை எந்தவிதமான நடைமுறை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சுற்றுச்சூழல் காவல் பிரிவு இருப்பினும், அவர்கள் வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும், கடற்கரை பாதுகாப்பு படை காலை நேரங்களில் சாலையோரங்களை சுத்தம் செய்து காலை 08.00 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றுவதில் மட்டுமே ஈடுபடுகிறது என்றும், கடற்கரைக்கு வந்து சேரும் குப்பை மேலாண்மையில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இடைக்கிடை தன்னார்வ அமைப்புகள் சிலர் வந்து அந்த இடத்தை சுத்தம் செய்தாலும், பிரச்சினையின் பரப்பளவை கருத்தில் கொண்டால் அது தற்காலிக தீர்வாக மட்டுமே அமைகிறது; முழுமையான சுத்திகரிப்பு அவர்களால் செய்ய இயலாத ஒன்றாக உள்ளது.

கழிவுகள் ஓட்டத்தைத் தடுக்க அந்த இடத்தில் வலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும், தற்போது கழிவுகள் அந்த வலையை மீறி கடற்கரைக்கு வந்து சேர்கின்றன. தினசரி சுத்தம் செய்ய வேண்டிய இடமாக இருந்தும், இதற்குப் பொறுப்பான எந்த நிறுவனமும் செயல்படாத நிலை, பொதுமக்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த கடற்கரைக்கு தினமும் வருகை தரும் மக்கள், இந்த பிரச்சினை குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், காவல்துறை பொறுப்பான அமைச்சின் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு அறிவித்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here