ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

Date:

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்து, அமெரிக்க டொலர் 9 மில்லியன் அளவிலான மதிப்பில் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (04 அல்லது நாளை அந்த கொள்வனவு நடைபெறக்கூடும் எனவும் அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அரலிய அரிசி வியாபாரம் உட்பட 25க்கும் மேற்பட்ட வணிகங்களின் உரிமையாளரான டட்லி சிறிசேன, சமீபத்தில் மிக ஆடம்பரமான ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்ததன் காரணமாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியிருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...