சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

0
181

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு (CIABOC) தீர்மானித்துள்ளது.

இந்த புகாரை தாக்கல் செய்திருப்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன ஆவார்.

அண்மையில் நடைபெற்ற ஆணைக்குழு கூட்டத்தில் இந்த புகார் தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சாமிந்த குலரத்னவுக்கு எதிராகவும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள வேறு ஒரு புகாரையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகருக்கு எதிரான இந்த புகாரை சாமிந்த குலரத்ன கடந்த 02ஆம் திகதி ஆணைக்குழுவில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த புகாரில்,

  • வாகனங்களின் தவறான பயன்படுத்தல்,
  • சட்டவிரோதமாக இரட்டை எரிபொருள் கொடுப்பனவு பெறுதல்,
  • அரசுக்கு சொந்தமான இரு அதிகாரப்பூர்வ இல்லங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துதல்,

உள்ளிட்ட மொத்தம் 8 ஊழல் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here