வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு நிதியில் பொது அமைப்புக்களுக்கு சிறீதரன் எம்.பி உதவி

Date:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே/94 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த பாரதிமன்ற சனசமூக நிலையத்திற்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தளபாடங்களும் ஜே/101 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த நண்பர்கள் விளையாட்டுக் கழகத்திற்கும் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்திற்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இன்றைய தினம் நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினருடன் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல்ப் பணிப்பாளர் திருமதி பிருந்தினி ஜெயந்தன் நிர்வாக உத்தியோகத்தர் கே.வி தனபாலா நாடாளுமன்ற உறுப்பினரின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் பிரபாகரன் துஷ்யந்தன் மற்றும் கிராம அலுவலர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...