நிலக்கரி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை ஆய்வு செய்ய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஆற்றல் அமைச்சின் செயலாளர் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து அவர் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், குறித்த குழுவில் மொரட்டுவ மற்றும் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் இணைந்து செயல்படுவர் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, இந்த கொள்முதல் (பிரசம்பாதனை) செயல்முறையில் எந்தவித குறையும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
