சுரேஸ் சாலே கைது! ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு?

Date:

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சுரேஸ் சாலே சற்றுமுன் சிஐடியினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் பெயரைத் தொடர்புபடுத்தி பிரித்தானியாவின் ‘சனல் 4’ தொலைக்காட்சி 2023ஆம் ஆண்டு ஒரு விசேட ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்த பிள்ளையானின் செயலாளராகப் பணியாற்றிய ஹன்சீர் அசாத் மௌலானா என்பவரே இத்தொடர்பு குறித்து வெளிப்படுத்தியிருந்தார்.

இதேநேரம் இதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில், சுரேஷ் சாலே இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.

எவ்வாறாயினும், 2024 நவம்பரில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் அவர் உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...