‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து GMOA விலகல்

Date:

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் விலகுவதற்கு மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார். 

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

அத்துடன், நோயாளர்களுடன் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும், பொதுமக்களுக்குக் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தமது சங்கம் இது தொடர்பில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட்ட போதிலும், அரசாங்கம் தமது கோரிக்கைகள் குறித்து சாதகமான பதிலை வழங்காமை வருத்தத்திற்குரிய விடயமாகும் எனவும் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...