ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் அருகே அமெரிக்கா படைகளை குவித்து வந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது.
அமெரிக்காவுடன் அணுஆயுதம் ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சு நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.
தெஹ்ரான் முழுவதும் வெடிகுண்டு சத்தம் கேட்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
