ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது.
“ஜனாதிபதி அனுர, தற்போது தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதில்லை”, என மனோ கணேசன், நேற்று நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது, பகிரங்கமாக கூறி இருந்தார். இதையடுத்தே இன்று இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.
இந்த தொலைபேசி உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து உரையாடுவதற்காக மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை ஏற்று கொண்ட ஜனாதிபதி அனுரகுமார, அடுத்த வாரம் தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவை, சந்தித்து உரையாட அழைப்பு விடுத்துள்ளார்.
