நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

Date:

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன பலவேகய (NPP) தலைமையிலான அரசே நிலைத்திருக்கும் என்றும் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கலுத்துறையில் மே 1 ஆம் திகதி நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சியில் உள்ள சிலர் சிறிய அளவில் போராட்டங்களை நடத்தி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், “போராட்டம் நடத்துவது எப்படி என்பதை நாங்கள்தான் இந்த நாட்டுக்கு கற்றுக் கொடுத்தோம். சிலர் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு இந்த அரசை மாற்ற முடியாது. இந்த அரசை பாதுகாக்க மக்களின் பெரிய ஆதரவு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டை உருவாக்கும் பணியில் எதிர்காலத்திலும் ஜாதிக ஜன பலவேகய அரசே செயல்படும் என்றும், மாற்று அரசுகள் உருவாக வாய்ப்பில்லை என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...