ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

Date:

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு மனு ஒன்றை அனுப்பத் தயாராக உள்ளனர்.

அந்த மனுவில், நீதித்துறையை மதித்து அதன் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2026 மே 25 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பை முன்னிட்டு, மக்களை ஆர்ப்பாட்டங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, ரோஹித அபேவர்தன, சாமர சம்பத் தசநாயக்க, கயந்த கருணாதிலக, இம்ரான் மஹ்ரூப், ரஞ்சித் மத்தும பண்டார, ஹேஷா விதானகே, ஹர்ஷண ராஜகருணா, நிசாம் காரியப்பர், ரவூப் ஹக்கீம், ஹெக்டர் அப்புஹாமி, அஜித் பி. பெரேரா, எஸ்.எம். மரிக்கார், ரோஹண பண்டார, சுஜீவ சேனசிங்க மற்றும் திலிப் வெதஆரச்சி உள்ளிட்ட உறுப்பினர்கள், ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...