விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயன்றால் அது நியாயமானதாக இருக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முயற்சி பல விஷயங்களை மறைத்து விடுவதற்கானதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளை தவிர்க்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்றும், எப்போது வருமாறு கூறினாலும் சென்று அதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவேன் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
