மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த நிறுவனம் இன்று (16) தெரிவித்துள்ளதாவது, துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பு ஒன்றினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, அந்த மோசடியான மின்னஞ்சல் செய்திகள் மூலம் வழங்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களின் அடிப்படையில், தமது நிறுவனம் 974,000 திர்ஹாம் தொகையை அந்த தவறான கணக்கிற்கு செலுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளித்துள்ள அந்த நிறுவனம், சென்னையில் அமைந்துள்ள தமது காரியாலயத்தில் பணிபுரிந்த நிதிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள் குழுவொன்றே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

அவர்கள் வணிக விலைப்பட்டியல்களின் கையொப்பங்கள் மற்றும் பணச்செலுத்துகை விபரங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றியமைத்து, நீண்டகாலமாக 22 மில்லியன் இந்திய ரூபாய் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கமைய, இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...

ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில்...