இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

Date:

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல்

இலங்கை அரசாங்கம் கடந்த காலத்தில் இந்தியாவுடன் எட்டிய பல முக்கிய ஒப்பந்தங்களை இன்னும் நடைமுறைப்படுத்தாதது தொடர்பாக இந்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் தொடர்பான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு (Colombo Security Conclave) ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்தாதது, கொழும்பு கோட்டை கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள அந்த அமைப்பின் செயலகத்திற்கு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கடற்படை உயரதிகாரிக்கு பணியைப் பொறுப்பேற்க தேவையான வசதிகளை வழங்காதது உள்ளிட்ட விடயங்கள் இந்தியாவின் அதிருப்திக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

அதேபோல், திருகோணமலை சம்பூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சூரிய மின்நிலையத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இன்னும் ஆரம்பிக்காதது மற்றும் இந்தியாவின் ராமேஸ்வரம், இலங்கையின் தலைமன்னார் ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை தெளிவான பதிலை வழங்காததும் இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அதிகாரிகளிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததாகவும் அந்தத் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நெல் விலை குறைவு என போராட்டம் நடத்தும் சிலர் கள்ளச்சாராய வியாபாரிகள்!

–பிரதியமைச்சர் டி.பி. சரத் குற்றச்சாட்டு நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை எனக் கூறி...