முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட நிலையில் இலஞ்ச ஊழல் குற்றச்சாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
தேவையான தகுதிகள் இன்றி யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு, பிரித்தானிய கடற்படை அகாடமியில் பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
